» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்ரோல் பங்க் அருகே கிடந்த கைத்துப்பாக்கி : போலீசார் விசாரணை

திங்கள் 21, ஏப்ரல் 2025 9:22:59 PM (IST)

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் அருகே அனாதையாக கிடந்த கைத்துப்பாக்கியை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கைத்துப்பாக்கி கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமசந்திரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த போது பெட்ரோல் பங்க் பின்புறம் கிடந்த கைத்துப்பாக்கியை மீட்டனர். 

பிஸ்டல் 0.32 எம்.எம்., 7.65 வகையை சேர்ந்த அந்த துப்பாக்கியை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.யாரும் இதுவரை துப்பாக்கிக்கு உரிமை கோரவில்லை. உரிமம் இல்லாத துப்பாக்கியாக இருக்கலாம் என்பதால் சட்டவிரோத செயலில் ஈடுபட யாரேனும் பதுக்கி வைத்திருந்தனரா? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி இயங்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory