» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூறைக்காற்றுடன் மழை: வீடு, பயிர்கள் சேதம்!

திங்கள் 21, ஏப்ரல் 2025 8:24:19 PM (IST)

பேய்க்குளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வீடு, பயிர்கள் சேதம் அடைந்தன. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் இன்று பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் முப்பது நிமிடங்கள் பெய்த மழையில் பால்ராஜ் என்பவரது வீட்டின் மேற்கூரை காற்றில் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்தது.

இதே போல் அவரது வயலில் பருத்திப் பயிர்கள் நல்ல நிலமையில் இருந்த நிலையில் காற்றில் செடிகள் அனைத்தும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த வீட்டிற்கும் பயிர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory