» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்னல் தாக்கி பிளஸ் 2 மாணவி பரிதாப சாவு
திங்கள் 21, ஏப்ரல் 2025 7:36:05 PM (IST)
விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டி கிராமத்தில் மின்னல் தாக்கி பிளஸ் 2 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குறளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மகள் முத்து கௌசல்யா (17). இவர் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் பொது தேர்வுகள் முடிந்ததை தொடர்ந்து விடுமுறையில் தற்போது வீட்டில் இருந்துள்ளார் இந்நிலையில் இன்று அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அவர் தனது வீட்டின் அருகில் காய வைக்கப்பட்டிருந்த மிளகாய் பழங்களை மழையில் நனைய விடாமல் இருப்பதற்காக தார்ப்பாய் கொண்டு மூடுவதற்காக அங்கு சென்றபோது, திடீரென மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சுய நினைவின்றி கிடந்துள்ளார்
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக முத்து கௌசல்யாவை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு முத்து கௌசல்யா தாயார் உட்பட உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்து அனைவரையும் கண்கலங்க செய்தது.
இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முத்து கௌசல்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறளையம்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










