» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:38:27 AM (IST)
கோவில்பட்டி அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி. நிலத் தரகர். இவரது மனைவி காளியம்மாள், ஜோதிமணிக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இத்தம்பதி மகன்களின் கல்விச் செலவுக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியிருந்தனராம். அதைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். மறுநாள் உறவினர் ஒருவர் காளியம்மாளைப் பார்க்கச் சென்றாராம். அப்போது, காளியம்மாள் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து கோவையில் உள்ள மகன் கருப்பசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காளியம்மாளின் சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கருப்பசாமி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










