» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!

ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:38:27 AM (IST)

கோவில்பட்டி அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி. நிலத் தரகர். இவரது மனைவி காளியம்மாள்,  ஜோதிமணிக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இத்தம்பதி மகன்களின் கல்விச் செலவுக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியிருந்தனராம். அதைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். 

இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். மறுநாள் உறவினர் ஒருவர் காளியம்மாளைப் பார்க்கச் சென்றாராம். அப்போது, காளியம்மாள் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து கோவையில் உள்ள மகன் கருப்பசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காளியம்மாளின் சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கருப்பசாமி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory