» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு: வடமாநில வாலிபர் கைது!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:29:15 AM (IST)
கோவில்பட்டியில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணத்தை திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி-சாத்தூர் பிரதான சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு நிறுவனம் நடத்தி வருபவர் ரங்கராஜ். இவர், கடந்த 6ஆம் தேதி நிறுவனத்தைப் பூட்டிவிட்டு, கழுகுமலை அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்கு பணியாளர்களுடன் சென்றார்.
நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக ரங்கராஜூக்கு மறுநாள் தகவல் கிடைத்தது. அவர் வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.3 லட்சத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சுரத் சிங் மகன் ஜெக் நாராயணசிங் (20) என்பவர் இத்திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










