» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளபோதும், மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் வருகிற ஜூன் 14ம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் துவங்கி உள்ளது இதன் காரணமாக தமிழக முழுவதும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பாரம்பரிய நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள், நாளை ஈஸ்டர் பண்டிகை என்பதால் இன்று கரை திரும்பின. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் மீன்களை வாங்க பொது மக்களின் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ 1300 ரூபாய் வரையும் விளைமீன், ஊழிமீன், பாறை ஆகிய மீன்கள் கிலோ 500 முதல் 600 ரூபாய் வரையும் நகரை கிலோ 300 ரூபாய் வரையும் நன்டு கிலோ 600 ரூபாய் வரையும் கேரை, சூரை, குறுவளை ஆகிய மீன்கள் கிலோ 300 முதல் 400 ரூபாய் வரவே விற்பனையானது சாலை மீன் ஒரு கூடை 2500 ரூபாய் வரை விற்பனையானது
இதேபோன்று ஏற்றுமதி ரக மீன்களான பன்டாரி, தம்பா, கிளை வாளை ஆகியவை கிலோ 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையானது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா
வியாழன் 5, மார்ச் 2026 8:07:30 AM (IST)

திருச்செந்தூர் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம்!
வியாழன் 5, மார்ச் 2026 8:00:43 AM (IST)

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)









