» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)
தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்சனையில் வாலிபரை அம்மிக் குழவியால் தாக்கி கொலை செய்த அவரது மாமனார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர், கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சரவணகுமார் (50), இவரது மூத்த மகள் சங்கீதா (21) இவருக்கும் நாசரேத் கீழ தெருவை சேர்ந்த முனியசாமி மகன் மாடசாமி (23) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மாடசாமி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சங்கீதா தனது தாயார் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. பின்னர் இரண்டு மாதம் கழித்து மனைவியை அழைத்து செல்ல மாடசாமி, புதியம்புத்தூர் வந்தாராம் அப்போது அவர் குடிபோதையில் வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மாமனார் சரவணகுமார் மகளை அனுப்ப மறுத்து விட்டார். இதனால் மாடசாமி மாமனார் மீது கோபத்துடன் இருந்துள்ளார்.
இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் புதியம்புத்தூர் வந்த மாடசாமி மனைவி குழந்தைகளை தன்னுடன் அனுப்பும்படி கூறியுள்ளார். ஆனால் மாமனார் சரவணகுமார் இப்போதைக்கு மகளை அனுப்ப முடியாது என்று கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாடசாமி மாமனார் சரவணகுமார் மீது பாறாங்கல்லை தூக்கி வீசினாராம்.
இதில் அவர் விலகிக் கொள்ளவே ஆத்திரம் அடைந்த சரவணகுமார் அந்த பாறாங்கல்லை தூக்கி மாடசாமி மீது வீசினார். இதில் அவர் கீழே விழுந்தார் அப்போது அவரது அருகில் இருந்த சரவணக்குமாரின் இரண்டாவது மருமகன் முத்துராமன் மகன் ஆதிலிங்கம் (25) என்பவர் அருகில் இருந்த அம்மி குழவியால் மாடசாமியை தாக்கினாராம்.
இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து அவரை புதியம்புத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது சம்பந்தமாக புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் சம்பவ இடத்திற்கு சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததார். மேலும் வழக்கு பதிவு செய்து சரவணகுமார், அவரது இரண்டாவது மருமகன் ஆதிலிங்கம் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி!!
வெள்ளி 23, மே 2025 5:00:18 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழ்வாய்வு: ட்ரோன் மூலமாக அளவீடு பணிகள் தொடங்கியது!
வெள்ளி 23, மே 2025 4:51:56 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தலா ரூ50 ஆயிரம் நிதி : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.
வெள்ளி 23, மே 2025 4:22:20 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 23, மே 2025 4:06:13 PM (IST)

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 23, மே 2025 4:02:59 PM (IST)

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவை
வெள்ளி 23, மே 2025 3:47:36 PM (IST)
