» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!

சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)

தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்சனையில் வாலிபரை அம்மிக் குழவியால் தாக்கி கொலை செய்த அவரது மாமனார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர், கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சரவணகுமார் (50), இவரது மூத்த மகள் சங்கீதா (21) இவருக்கும் நாசரேத் கீழ தெருவை சேர்ந்த முனியசாமி மகன் மாடசாமி (23) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மாடசாமி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சங்கீதா தனது தாயார் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. பின்னர் இரண்டு மாதம் கழித்து மனைவியை அழைத்து செல்ல மாடசாமி, புதியம்புத்தூர் வந்தாராம் அப்போது அவர் குடிபோதையில் வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மாமனார் சரவணகுமார் மகளை அனுப்ப மறுத்து விட்டார். இதனால் மாடசாமி மாமனார் மீது கோபத்துடன் இருந்துள்ளார்.

இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் புதியம்புத்தூர் வந்த மாடசாமி மனைவி குழந்தைகளை தன்னுடன் அனுப்பும்படி கூறியுள்ளார். ஆனால் மாமனார் சரவணகுமார் இப்போதைக்கு மகளை அனுப்ப முடியாது என்று கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாடசாமி மாமனார் சரவணகுமார் மீது பாறாங்கல்லை தூக்கி வீசினாராம். 

இதில் அவர் விலகிக் கொள்ளவே ஆத்திரம் அடைந்த சரவணகுமார் அந்த பாறாங்கல்லை தூக்கி மாடசாமி மீது வீசினார். இதில் அவர் கீழே விழுந்தார் அப்போது அவரது அருகில் இருந்த சரவணக்குமாரின் இரண்டாவது மருமகன் முத்துராமன் மகன் ஆதிலிங்கம் (25) என்பவர் அருகில் இருந்த அம்மி குழவியால் மாடசாமியை தாக்கினாராம். 

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து அவரை புதியம்புத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது சம்பந்தமாக புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் சம்பவ இடத்திற்கு சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததார். மேலும் வழக்கு பதிவு செய்து சரவணகுமார், அவரது இரண்டாவது மருமகன் ஆதிலிங்கம் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





CSC Computer Education


New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory