» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)



தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 1,300 ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் சுமாா் 1,350 ஒப்பந்த ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு வழங்குவதைப்போல ஊதிய உயா்வு அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிா்த்து நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

இதுதொடா்பான நெய்வேலி என்எல்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்கள் 1,300 போ் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினா்.

இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல் மின்நிலைய செயலா் அப்பாதுரை, தொழிலாளா் முன்னேற்ற சங்க அமைப்புச் செயலா் அன்பழகன், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா் சங்கம் தொமுச செயலா் முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டம் காரணமாக அனல் மின்நிலைய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இப் பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory