» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.

வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)



நாசரேத் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். 

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தபசு காலத்தின் இறுதி வாரத்தின் வெள்ளி கிழமை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதே போல் ஓர் நாளில் இயேசு கிறிஸ்து கொல்கொதா இடத்தில் சிலுவையில் தொங்கினார். அந்த சமயத்தில் சிலுவையில் இயேசு சொன்ன 7 வார்த்தைகளை கூறினார். அதை தியானிக்கும் விதமாக இன்றைய நாளை கிறிஸ்தவர்கள் மும்மணி தியான ஆராதனை என்று சிஎஸ்ஐ தேவாலயங்களில் ஒன்று கூடி தியானம் பண்ணி வழிபடுகின்றனர். 

இதனால் நாசரேத் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன. நாசரேத் பரிசுத்த சீயோன் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் ஆராதனை நடைபெற்றது இதில் தலைமை போதகர் எட்வின் பிரபாகர் தலைமையில் சிறப்பு செய்தியும் பிரார்த்தனை நடைபெற்றது. சபையின் மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory