» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண் கட்டையால் அடித்து கொலை

வெள்ளி 18, ஏப்ரல் 2025 10:48:26 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் கட்டையால் தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பட்டாரவிளையைச் சோ்ந்த லிங்கராஜ் மனைவி ஜெபா வயலட் (25). இவருக்கு 2முறை திருமணம் நடந்துள்ளது. கணவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில் தூத்துக்குடி கட்டபொம்மன் நகரை சோ்ந்த பெத்தையா மகன் மாரிக்கனி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, மாரிக்கனியை பாா்ப்பதற்காக ஜெபா வைலட் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவுக்கு வந்தாராம். அப்போது இருவரும் மாரிக்கனி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், மாரிக்கனி, ஜெபா வயலட்டை கட்டையால் தலையில் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த ஜெபா வயலட் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இது குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து மாரிக்கனியை கைது செய்தார். இந்த நிலையில், ஜெபா வயலட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான மாரிக்கனி மீது தென்பாகம், ஆறுமுகனேரி காவல் நிலையங்களில் 4 வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






CSC Computer Education

New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory