» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி தடுப்பணையில் மூழ்கி ஒருவர் பலி!

வெள்ளி 18, ஏப்ரல் 2025 9:00:51 AM (IST)

ஏரல் அருகே தாமிரபரணி தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தபோது தொழிலாளி ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம்,ஏரல் அருகே உள்ள கீழமங்கலகுறிச்சி மறவர் தெருவை சேர்ந்தவர் தினகரன் (53). இவர் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளி. இவருக்கு ஆறுமுகசெல்வி என்ற மனைவியும், முத்துமாரி என்ற மகளும் உள்ளனர். இவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வடகால் வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்கு திரும்புவது வாடிக்கையாம்.

தற்போது வடகால் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து அருகில் உள்ள மங்கலக்குறிச்சி தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் இரவு வரை வீடு திரும்பாததால், குடும்பத்தினர், உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்பொது ஆற்று தடுப்பணை அருகே அவரது செருப்பு மற்றும் உடைகள் இருந்துள்ளது. 

இதை தொடர்ந்து பதறிப்போன உறவினர்களும், பொதுமக்கள் சிலரும் தண்ணீரில் இறங்கி தேடினர். அப்போது தண்ணீருக்கு அடியில் இறந்த நிலையில் கிடந்த அவரது உடலை பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தர்.. இது குறித்த தகவலின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory