» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொல்ல முயன்ற ரவுடி கைது

வியாழன் 17, ஏப்ரல் 2025 11:54:42 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை கட்டையால் தாக்கி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பட்டாண்டி விளை கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கராஜ். லாரி டிரைவர். இவரது மனைவி ஜெபா வயலட் (25) இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார். பின்னர் 2022 ஆம் ஆண்டு லிங்கராஜை திருமணம் செய்துள்ளார். 

இந்த நிலையில் அவர் தூத்துக்குடிக்கு ராஜாஜி பூங்காவிற்கு வந்தபோது தூத்துக்குடி  கட்டபொம்மன் நகரை சேர்ந்த பெத்தையா மகன் மாரிக்கனி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாரிக்கனி, ஜெபா வைலட்டை தனது வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரம் அடைந்த மாரிக்கனி, ஜெபா வயலட்டை கட்டையால் தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து மாரிக்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாரிக்கனி மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாகவும், பிரபல ரவுடி என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory