» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொல்ல முயன்ற ரவுடி கைது
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:54:42 AM (IST)
தூத்துக்குடியில் பெண்ணை கட்டையால் தாக்கி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பட்டாண்டி விளை கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கராஜ். லாரி டிரைவர். இவரது மனைவி ஜெபா வயலட் (25) இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார். பின்னர் 2022 ஆம் ஆண்டு லிங்கராஜை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தூத்துக்குடிக்கு ராஜாஜி பூங்காவிற்கு வந்தபோது தூத்துக்குடி கட்டபொம்மன் நகரை சேர்ந்த பெத்தையா மகன் மாரிக்கனி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாரிக்கனி, ஜெபா வைலட்டை தனது வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த மாரிக்கனி, ஜெபா வயலட்டை கட்டையால் தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து மாரிக்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாரிக்கனி மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாகவும், பிரபல ரவுடி என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










