» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபரை கட்டையால் தாக்கி கொல்ல முயற்சி : 3பேர் கைது

வியாழன் 17, ஏப்ரல் 2025 11:33:08 AM (IST)



தூத்துக்குடியில் வாலிபரை கட்டையால் தாக்கி கொல்ல முயன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் ஆறுமுகசாமி (19). இவர், தூத்துக்குடி துறைமுகத்தில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி முத்தையாபுரம் திருமாஜி நகரில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் நடனமாடினாராம். 

இதையடுத்து அய்யன்கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் பாலமுருகன் என்பவர, எங்கள் ஏரியாவில் வந்து எப்படி ஆடலாம் என்று கூறி அவரிடம் தகராறு செய்தாராம். மேலும், அவரை பாலமுருகன் உட்பட 5பேர் சேர்ந்து கட்டையால் தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த ஆறுமுகசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, பாலமுருகன், அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த யோவான் மகன் பாக்கியராஜ் (31), பிச்சை மகன் பிரபாகரன் (35) ஆகிய 3 பேரை கைது செய்தார். மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள 3பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory