» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் திருட்டு : பணிப் பெண் உள்பட 3 பேர் கைது

வியாழன் 17, ஏப்ரல் 2025 8:54:23 AM (IST)

காயல்பட்டினத்தில் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 38 தங்க நாணயங்களை திருடிய வழக்கில் பணிப் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவைச் சேர்ந்தவர் யாகூப். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாஜிதா பர்வீன். இவர்களுக்கு 2மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் காயல்பட்டினம் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலைமாதம் சாஜிதா பர்வீன், வீட்டு லாக்கரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தலா 8 கிராம் எடை கொண்ட 38 தங்க நாணயங்கள் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வீட்டு வேலைக்கார பெண் அருணாசலபுரம் தீபிகா என்ற அல்பியா (35), அவரது சகோதரி இசக்கி தங்கம் (42), இசக்கி தங்கம் மகன் தமிழரசன் (23) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory