» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியதாக புகார் : முன்னாள் டிஎஸ்பி மே 5ஆம்தேதி ஆஜராக சம்மன்!

புதன் 16, ஏப்ரல் 2025 8:40:35 PM (IST)

சாத்தான்குளத்தில் புகார் கொடுத்த பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியதாக முன்னாள் டிஎஸ்பி ராஜி, மற்றும் தட்டார்மடம் முன்னாள் எஸ்ஐ மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. டிஎஸ்பி மற்றும் எஸ்.ஐ ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் மே 5ஆம்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி வடக்கு ராமசாமிபுரத்தைச் சேர்ந்த செந்தில்வேல் மனைவி வசந்தா (45). இவரது நிலத்திற்கு செல்லும் பாதையில் அதே ஊர் சுயம்புலிங்கம் குடும்பத்தினர் நடுவக்குறிச்சி மின்வாரியம் சார்பாக மின் கம்பம் அமைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் சுயம்புலிங்கம் குடும்பத்தினர் மற்றும் மின்வாரியத்திற்கு எதிராக சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 20.02.2022ஆம் ஆண்டு கம்பி வேலி, மற்றும் இரும்பு கேட் திருட்டு போனதாக தட்டார்மடம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகார் தொடர்பாக அப்போதைய எஸ்ஐ பென்சன், அப்போதைய சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜி ஆகியோர் எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக புகார் தாரனான வசந்தா மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக மிரட்டி புகார் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கை வாபஸ் வாள்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் வசந்தா, அப்போதைய தட்டார்மடம் எஸ். ஐ பென்சன் மற்றும் அப்போதைய சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜி ஆகியோர் மீது நடவடிக்கை கோரி சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் தனி வழக்காக தாக்கல் செய்தார். இந்த வழக்கு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி தேவி ரெக்ஷா, எஸ்.ஐ பென்சன், டிஎஸ்பி ராஜி ஆகியோர் வரும் மே 5ஆம்தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்பிட தெரிவித்தார். அதன்படி எ¢ஸ்.ஐ பென்சன் மற்றும் டிஎஸ்பி ராஜி ஆகியோர் நீதிமன்ற விசாரணைககு ஆஜராக நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory