» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முதல்வர் படைப்பகம்: மேயர் ஆய்வு

திங்கள் 14, ஏப்ரல் 2025 11:55:35 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் படைப்பகம் அமைய உள்ள இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்காக ஒரு அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26ல் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். 

இந்த முதல்வர் படைப்பகமானது தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைய இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்று தெரிவித்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory