» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் முதல்வர் படைப்பகம்: மேயர் ஆய்வு
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:55:35 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் படைப்பகம் அமைய உள்ள இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்காக ஒரு அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26ல் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இந்த முதல்வர் படைப்பகமானது தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைய இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்று தெரிவித்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










