» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சேவைக் குறைபாடு : இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.2,80,082 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
சனி 12, ஏப்ரல் 2025 10:06:17 AM (IST)
நான்கு சக்கர வாகனத்தின் பழுது நீக்குவதற்காக செலுத்தப்பட்ட தொகை மற்றும் சேவை குறைபாட்டிற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.2,80,082 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையைச் சார்ந்த தங்க இசக்கி பெருமாள் என்பவரது நான்கு சக்கர வாகனம் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்து விட்டது. உடனே அந்த வாகனத்தை தூத்துக்குடியிலுள்ள கார் விற்பனை நிறுவனத்திடம் பழுது பார்க்க அனுப்பியுள்ளார். அதோடு காப்பீடு நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காப்பீடு நிறுவனம் பாதிக்கப்பட்ட காரை மதிப்பீடு செய்ய சர்வேயரை அனுப்பவில்லை. இதற்கிடையில் பழுது நீக்குவதற்கான தொகையை நுகர்வோர் செலுத்தி விட்டு காப்பீடு நிறுவனத்திடம் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் பணத்தை தர மறுத்துள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தங்க இசக்கி பெருமாள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தின் பழுது நீக்குவதற்காக ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகையான ரூபாய் 2,45,082 மற்றும்; சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 25,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










