» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வக் புவாரிய திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி 12, ஏப்ரல் 2025 8:37:48 AM (IST)



வக் புவாரிய திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காயல்பட்டினத்தில் பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காயல்பட்டினம் அல்ஜாமில் அஸ்கர் ஜூம்மா பள்ளிவாசல் முன்பு வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காயல்பட்டினத்தில் அல் ஜாமிஉல் அஸ்கர் ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று தொழுகை முடிந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வெளியே வந்தனர். அனைவரும் பள்ளிவாசல் முன்பு கூடினர். 

அங்கு, முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் வக்புவாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும், மத்திய பா.ஜனதா ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பிவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் ஐக்கிய பேரவை, த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், எஸ்.டி,பி,ஐ. ம.ஜ.க., கட்சி நிர்வாகிகள், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory