» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் திடீா் தீ விபத்து!

சனி 12, ஏப்ரல் 2025 8:18:08 AM (IST)



கோவில்பட்டி அருகே நகராட்சி குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினா் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியின் 36 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், எட்டயபுரம் சாலையில்உள்ள சிதம்பரபுரம் ஊராட்சி பகுதியில் தனித்தனியாக கொட்டப்பட்டு, அங்கு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறை அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான வீரா்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் அங்கு சென்று சுமாா் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. வாகனங்களில் சென்றோா் மிகவும் சிரமம் அடைந்தனர். சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் ஆய்வாளா்கள் ஆரியங்காவு, சுதாகா் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory