» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் பக்தர்கள்: பொங்கலிட்டு வழிபாடு
வெள்ளி 11, ஏப்ரல் 2025 5:14:20 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 2ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன. இதைத் தொடர்ந்து 10-ம் திருநாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
காலை ஹோமம் வளர்க்கப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதுபோல் மாவட்டத்தில் உள்ள மணக்கரை, மணத்தேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கோவில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு மற்றும் பொங்கலிடுதல், படையல் பூஜை போடுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










