» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு நிகழ்ச்சிக்கு ரூ.10ஆயிரம் வசூல்? ஆடியோ குறித்து விசாரணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வியாழன் 10, ஏப்ரல் 2025 3:26:45 PM (IST)



அரசு நிகழ்ச்சிக்கு ரூ.10ஆயிரம் வசூல் செய்வதாக மருத்துவர் பேசிய ஆடியோ குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், "தென்காசியில் சுகாதாரத்துறை நிகழ்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அதனை நானும் கேட்டேன். பணம் வசூல் செய்து எந்த நிகழ்ச்சியும் நடத்துவது கிடையாது. 

எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவர்களுடைய சாப்பாடு கூட நான் சாப்பிடுவது கிடையாது.  நான் ஹோட்டலில் தான் சாப்பிடுவேன். எனக்கு சால்வை, புத்தகங்கள் கூட பரிசளிக்க கூடாது என்று சொல்லி இருக்கின்றேன். வெளியான ஆடியோவில் இருக்கும் மருத்துவரின் குரல் யாருடைய குரல்? உண்மைதானா என்று விசாரிக்க சென்னையில் இருந்து ஒரு சுகாதாரத்துறை இணை இயக்குனரை அனுப்பியுள்ளேன். அவர் யார் என்று தெரிந்தால் இன்று மாலைக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் 

தென்காசியில் நாளை நடக்க இருந்த நிகழ்ச்சியை பங்குனி உத்திரம் என்பதால் தான்  அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளேன். மற்றொரு நாளில் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory