» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாயமான சிறுவன் ரயில் நிலையத்தில் மீட்பு

புதன் 9, ஏப்ரல் 2025 8:37:02 AM (IST)

பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய தூத்துக்குடி சிறுவனை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர்.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு ரயில்வே போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 15 வயதுடைய ஒரு சிறுவன் அங்குமிங்குமாக சுற்றித்திரிந்தான். இதைப் பார்த்த போலீசார் உடனே சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கந்தசாமிபுரத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. 

அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் வீட்டில் இருந்து வெளியேறி பஸ் மூலமாக நாகர்கோவில் வடசேரிக்கு வந்துள்ளான். பின்னர் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்து எந்த ரயிலில் ஏற வேண்டும் என்பது தெரியாமல் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துக் கொண்டு சுற்றித் திரிந்துள்ளான். இதைத்தொடர்ந்து சிறுவனை போலீசார் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

அப்போது சிறுவன் கூறுகையில், "நான் வீட்டில் அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டில் யாரிடமும் கூறாமல் வந்துவிட்டேன்” என்றான். இதைத் தொடர்ந்து சிறுவன் மீட்கப்பட்டது குறித்து தூத்துக்குடியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே குழந்தைகள் நல அலுவலகத்துக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரயில் நிலையம் வந்த அதிகாரிகளிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுவன் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டான். இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் நேற்று காலை நாகர்கோவில் வந்தனர். பின்னர் பெற்றோரிடம் எழுதி வாங்கிவிட்டு சிறுவனை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory