» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி மீது பைக் மோதல்: போஸ்ட் மாஸ்டர் பரிதாப சாவு

புதன் 9, ஏப்ரல் 2025 8:18:36 AM (IST)

எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த நின்ற லாரி மீது பைக் மோதிய விபத்தில் போஸ்ட் மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சிவகுமார் (45) எட்டயபுரம் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு பணி முடிந்து பேரிலோவன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இதனிடையே எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை அருகே குமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் கைலாஷ் (31) என்பவர் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கோயம்புத்தூருக்கு இரும்பு பொருட்களை டாரஸ் லாரியில் ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்த நிலையில் லாரி திடீரெனப் பொழுதாகி சாலையில் நின்றது.

பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது போஸ்ட் மாஸ்டர் சிவகுமாரின் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவக்குமாரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory