» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செண்பகவல்லி அம்மன் கோவில் தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

புதன் 9, ஏப்ரல் 2025 8:09:28 AM (IST)



கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் தேர் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கம்மவார் சங்க துணைத் தலைவர் பட்டுராஜன், செயலர் அழகர்சாமி, பொருளாளர் என். ராதாகிருஷ்ணன், செண்பகவல்லி அம்மன் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தலைமை எழுத்தர் மாரியப்பன் உள்பட கம்மவார் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் தேர் திருவிழாவில், ஜாதியை சுட்டிக்காட்டும் வகையில் பனியன்களை அணியக் கூடாது, தலையில் ரிப்பன் அணியக் கூடாது, மது அருந்திய நிலையில் விழாவில் பங்கேற்கக் கூடாது. அரசியல் சம்பந்தமான பேச்சுக்களையோ, கொடிகளையோ பயன்படுத்தக் கூடாது. தேர் திருவிழா மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக தேர் தடி முறைதாரர்களான மூப்பன்பட்டி வீரபாண்டியன் தலைமையிலான குழுவினருடனும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory