» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடை திருவிழா: 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் வழிபாடு.
புதன் 9, ஏப்ரல் 2025 8:03:36 AM (IST)

எட்டையபுரம் அருகே எத்திலப்பன் நாயக்கன்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடை திருவிழாவை முன்னிட்டு 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் பங்குனி கொடைத் திருவிழாவை முன்னிட்டு சுந்தர மூர்த்தி விநாயகர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட 108 பால்குடங்கள் மூலம் கோவிலில் உள்ள பத்திரகாளியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் நன்கு அலங்கரிக்கப்பட்ட பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
மிகவும் சக்தி வாய்ந்த இக்கோவிலில் பால்குடம் எடுத்து வழிப்பட்டால், அனைத்து தீங்குகளும் நீங்கி, சுபகாரியங்கள் மற்றும் குடும்ப நிம்மதி கிடைக்கும் என்ற ஐதீகம் இருப்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். விழாவில் திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்னர். மேலும், கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










