» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாருக்கு கொலை மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரர் கைது

திங்கள் 7, ஏப்ரல் 2025 8:29:01 AM (IST)

கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீசாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை  வீரா் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே முக்கூட்டு மழை ஸ்ரீ முத்து வீரப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சிக்கு கழுகுமலை காவல் நிலைய போலீசார் மாரியம்மாள், சேதுராஜன் ஆகிய 2 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சிப்பிப்பாறை வடக்கு தெருவை சோ்ந்த சமுத்திரவேல் மகனான எல்லை பாதுகாப்பு படை காவலரான பாண்டியராஜ் (33), அவா்கள் இருவரையும் அவதூறாக பேசி மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்தாராம். அப்பகுதி மக்கள் கண்டித்தவுடன் அவா் தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து, காவலா் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து பாண்டியராஜை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory