» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவர் சரமாரியாக குத்தி கொலை : மகன் வெறிச்செயல்

சனி 5, ஏப்ரல் 2025 8:04:54 AM (IST)

தூத்துக்குடியில் தந்தையை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர் 

தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலை மகன் ராஜ் (56), மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். இவரது 2வது மகன் ஜேம்ஸ் (33), திருமணம் ஆகி மனைவியுடன் அண்ணாநகர் 6வது தெருவில் குடியிருந்து வருகிறார். 

ஜேம்ஸ் அடிக்கடி குடித்துவிட்டு பெற்றோரிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார் இதனால் பெற்றோர் தனியாக 1ம் கேட் பகுதியில் வேறு முகவரியில் தனியாக குடியிருந்து வந்துள்ளனர், அங்கு சென்றும் மகன் தகராறு செய்ததால் அங்கிருந்து முகவரி மாற்றி கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகிழ்ச்சிபுரம் முகவரிக்கு வந்துள்ளனர்,

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகிழ்ச்சிபுரம் சென்ற மகன் ஜேம்ஸ், தனது தந்தை ராஜிடம் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு  டூவீலரில் வந்து கொண்டிருந்த தந்தை ராஜை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் சம்பவ இடத்திற்கு உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக கொலை வழக்கு பதிவு செய்து அவரது மகன் ஜேம்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory