» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:20:10 PM (IST)



மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மதன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்டச் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் ஷாம், பிரதீப், நந்தகுமார், அருண்பாண்டி, அருண்குமார், ஆதி, லோகேஷ், திலீபன், முத்துவேல், சுப்பிரமணி, சுபாஷ், குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory