» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செங்கல் சூளை அருகே ஆண் சடலம் மீட்பு : போலீஸ் விசாரணை!

வியாழன் 3, ஏப்ரல் 2025 10:47:46 AM (IST)

வல்லநாடு அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள தனியார் செங்கல் சூளை நுழைவாயில் அருகே ஒரு ஆண் சடலம் கிடைப்பதாக முறப்பநாடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு சடலத்தை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

இறந்த கிடந்த நபருக்கு சுமார் 60 வயது இருக்கும். வேட்டி சட்டை அணிந்திருந்தார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory