» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள், மதுபான பாட்டில்கள் பறிமுதல் : ஒருவர் கைது!

சனி 29, மார்ச் 2025 8:15:42 PM (IST)



தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 37 கிலோ புகையிலை பொருட்கள், 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. .

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் போலீசார் இன்று (29.03.2025) ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் தெற்கு தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாடதங்கம் மகன் ராஜவேல் (54) என்பதும் தனது வீட்டில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீசார் ராஜவேலை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.25,000 மதிப்புள்ள 37கிலோ 800 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் 29 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory