» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறையில் 62பேருக்கு பொது மாறுதலுக்கான ஆணை : எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்!

சனி 29, மார்ச் 2025 8:09:42 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் 62பேருக்கு பொது மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள 62 காவல்துறையினருக்கு இன்று பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

இதில் மேற்படி காவல்துறையினருக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மற்றும் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மாறுதல் வழங்கி உத்தரவிட்டார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணி கண்காணிப்பாளர்கள் உட்பட அமைச்சு பணி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory