» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் பொது ஏலம்

சனி 29, மார்ச் 2025 7:55:49 PM (IST)



தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்களுக்கு இன்று பொது ஏலம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கார் மற்றும் 19 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 20 வாகனங்களுக்கு மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   ஆல்பர்ட் ஜான்  தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  ஆறுமுகம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  குரு வெங்கட்ராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்  முருகன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயத்தீர்வை உதவி ஆணையர்  கல்யாணகுமார் ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory