» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குரூஸ் பர்னாந்து நினைவிடத்தில் அஞ்சலி!
சனி 29, மார்ச் 2025 5:15:14 PM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் பாண்டியபதி தேர்மாறன் மீட்பு குழு மற்றும் பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாநகரத் தந்தை, குடிநீர் தந்த கோமான் முன்னாள் நகராட்சி முன்னாள் தலைவர் குரூஸ் பர்னாந்து 95 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாண்டியபதி தேர்மாறன் மீட்பு குழு, அனைத்து ஊர் பரத நலக் கமிட்டியினர், முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கம், குரூஸ்பர்னாந்திஸ் மக்கள் மன்றம், சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில் பாண்டியாபதி தேர்மாறன் மீட்பு குழு சார்பில் அந்தோணிசாமி, இன்னாசி, ஜான் பெர்னாண்டோ, ஜான்சன், ரவி, சைமன்ஸ், பாரத், ஜெகன், பிரேம், ஆரோக்கியசாமி, அனைத்து ஊர் பரத நலக் கமிட்டி, முத்துக் குளித்துறை பரத நலச்சங்கம் சார்பில் கனகராஜ், ஜான்சன், பியோ, ராஜ், ராஜா, குரூஸ் பர்னாந்திஸ் மக்கள் மன்றம் சார்பில் இக்னேஷியஸ், ரூஸ்வால்ட், முன்னாள் பொறுப்பு மேயர் சேவியர் உட்படப லர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)
