» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஜாண்சன் நர்சரி பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சனி 29, மார்ச் 2025 3:15:47 PM (IST)



தூத்துக்குடி ஜாண்சன் நர்சரி & பிரைமரி பள்ளியில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி ஜாண்சன் நர்சரி & பிரைமரி பள்ளியில் மார்ச் 29, 2025 அன்று POCSO சட்டம் குறித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகள் பாதுகாப்பு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் பேசப்பட்டன.

தமிழக அரசு விதவை மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தின் உறுப்பினர் வழக்கறிஞர் சொர்ணலதா விழிப்புணர்வு உரையாற்றினார். அவர் POCSO சட்டம் மட்டுமின்றி POSH (Prevention of Sexual Harassment) சட்டம், பள்ளிகளில் உள்ளக புகார் குழு (ICC - Internal Complaints Committee) மற்றும் பாலியல் தொல்லை தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்  செல்வராஜ், நிறுவனர்/முதல்வர்  பாத்திமா ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு கூட்டத்தினை சிறப்பித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தலைமையாசிரியை  ஜூஅனா கோல்டி, ஆசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்தார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory