» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

வியாழன் 27, மார்ச் 2025 8:14:52 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.. 

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஸ்மார்ட்சிட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள் 

மேலும் அவரை சோதனை செய்ததில் அவரது இடுப்பில் ஒரு கத்தி வைத்திருப்பதை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர், தாளமுத்து நகர் மேல அழகாபுரியைச் சேர்ந்த மணி முத்து மகன் மாரிமுத்து சூர்யா (22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory