» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வியாழன் 27, மார்ச் 2025 8:11:56 AM (IST)

கோவில்பட்டியில் பணியில் இருந்த பெண் காவலரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெரு சந்திப்பில், போக்குவரத்து பிரிவு பெண் காவலர் இந்திராகாந்தி நேற்று பணியில் இருந்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மாணிக்கராஜா என்பவர் செல்போனில் பேசியபடி பைக்கை ஓட்டி சென்றாராம். 

இதைக் கண்ட பெண் காவலர் இந்திரா காந்தி அவரை நிறுத்தி, செல்போனில் கொண்டு பைக்கை ஓட்டாதீர்கள் என அறிவுறுத்தினாராம். அப்போது மாணிக்கராஜா, அவரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மாணிக்கராஜாவை (45) கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory