» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு
புதன் 26, மார்ச் 2025 10:15:39 AM (IST)

விளாத்திகுளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பர நகர் பகுதியைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் தனது வீட்டின் அருகில் உள்ள பொதுப்பாதையை 5' அடி ஆக்கிரமித்திருப்பதாகவும், இதனால் அங்குள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி, பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த கோரிக்கையை முன்வைத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பட்டா உட்பிரிவை கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் இப்பாதையானது பட்டா நிலத்தில் வருவதால் என்னால் சட்டத்திற்குட்பட்டு எதுவும் செய்யமுடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பிரச்சினை குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தவறு இருக்கும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். மேலும், இந்த பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தராதபட்டசத்தில், சிதம்பரநகரில் யார் செத்தாலும் தாலுகா ஆபிஸ்ல-தான் புதைப்போம் என ஆக்ரோஷமாக தெரிவித்துச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










