» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி

புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)



தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் புனித ரமலானை முன்னிட்டு இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் விக்னேஷ் தலைமை தாங்கினார் ரோட்டரி மாவட்ட செயலாளர் முகமது யூஸ் ஆஃப் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புனித ஜாமியா பள்ளிவாசல் இமாம் அப்துல் அலிம் மற்றும் செயலாளர் எம் எஸ் எப் ரகுமான் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். ரொட்டேரியன் கண்ணன், உதவி ஆளுநர் மற்றும் சங்கத்தின் செயலாளர் விக்டர், கௌரவ விருந்தினர் இமாம் அலிம் இப்தார் நற்செய்திகளையும் நோன்பின் கடை பிடிப்புகளையும் மிகச் சிறப்பாக விவரித்தார்.

செயலாளர் ரகுமான் ரம்ஜான் நோன்பு மாதம் கடைபிடிக்கும் 5 நற்பண்புகளை பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் முகமது யூசுப் ராஜா பேசுகையில் இதுபோன்று மத வேறுபாடு இன்றி அனைவரும் இணைந்து பங்கேற்று இப்தார் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகிறது இதுபோன்ற ஒற்றுமை நமக்குள் இருப்பினும் யாரேனும் நம்மை பிரிக்க இயலாது என்று உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிட்டரின் இப்ராகிம், பைசர் ரகுமான் ரொட்டேரியன், ஆசிக் மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education






New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory