» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி : எஸ்பி துவக்கி வைத்தார்!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:11:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஸ்ரீவைகுண்டம், பத்மநாபமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரகுருபரர் சுவாமி கலை கல்லூரியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சமூக ஒற்றுமை, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் பென்னடிக் ஆசீர், வருவாய் கோட்ட அலுவலர் பிரபு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜமால், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் மற்றும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலை கல்லூரி முதல்வர் விஜயகுமார் உட்பட கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










