» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை

செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

தூத்துக்குடியில் கல்லூரிக்குச் சென்று மேல்படிப்பு படிக்குமாறு தாய் வற்புறுத்தியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார்.  

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன் முருகன் மகன் பெரியசாமி (18), இவரது தந்தை வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். பெரியசாமி பிளஸ் 2 வரை படித்துவிட்டு பெயின்டர் வேலை செய்து வருகிறார். பெரியசாமியை அவரது தாயார் கல்லூரிக்கு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று அதற்காக விண்ணப்பம் செய் என்று வற்புறுத்தினாராம். 

ஆனால் பெரியசாமிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறினாராம்.  இந்நிலையில நேற்று அவர் தாயார் உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் மாடியில் உள்ள அறையின் மின்விசிறியில் பெரியசாமி சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பெரியசாமியின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்ஸி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory