» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)
தூத்துக்குடியில் கல்லூரிக்குச் சென்று மேல்படிப்பு படிக்குமாறு தாய் வற்புறுத்தியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன் முருகன் மகன் பெரியசாமி (18), இவரது தந்தை வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். பெரியசாமி பிளஸ் 2 வரை படித்துவிட்டு பெயின்டர் வேலை செய்து வருகிறார். பெரியசாமியை அவரது தாயார் கல்லூரிக்கு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று அதற்காக விண்ணப்பம் செய் என்று வற்புறுத்தினாராம்.
ஆனால் பெரியசாமிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறினாராம். இந்நிலையில நேற்று அவர் தாயார் உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் மாடியில் உள்ள அறையின் மின்விசிறியில் பெரியசாமி சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பெரியசாமியின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்ஸி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










