» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டாஸ்மார்க் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 24, மார்ச் 2025 3:45:00 PM (IST)
தூத்துக்குடி டாஸ்மார்க் கடைகளில் எம்.ஆர்.பி.யை விட அதிகமாக விலைக்கு மதுபானம் விற்பனை குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி டூவிபுரம் ராஜவேல், காசிலிங்கம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "பல டாஸ்மார்க் கடையில் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு காவல்துறை பாதுகாப்புடன், மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றது. இதனை கண்டித்து பாஜக சார்பாக இவ் ஊழல் மீது தமிழக முதல்வர் துணை முதல்வர் படங்கள் ஒட்டியும் வருகின்றனர். அவர்களை காவல்துறை கைது செய்கிறது.
ஆனால் அதிக விலைக்கு விற்கும் டாஸ்மார்க் ஊழியருக்கு சாதகமாக செயல்படுகிறது. டாஸ்மார்கில் அதிக விலைக்கு மது விற்பதை காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அரசு அதிகாரிகள் பில்லுக்கு மேல் அதிக விலைக்கு பொருளை விற்பனை செய்யக்கூடாது, விற்பனை விலை, கடையின் உள்ள ஸ்டாக் எழுதியும் வைக்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்னர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











MarimuthuMar 24, 2025 - 06:39:31 PM | Posted IP 162.1*****