» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் கொத்தனார் பலி!
திங்கள் 24, மார்ச் 2025 11:16:02 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கொத்தனார் உயிரிழந்தார்.
தூத்துக்குடி கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் சண்முகசாமி மகன் கோபால் (43), கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலைியல், இவர் நேற்று இரவு இவர் வைப்பாரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
குளத்தூர் சொசைட்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










