» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் கொத்தனார் பலி!

திங்கள் 24, மார்ச் 2025 11:16:02 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கொத்தனார் உயிரிழந்தார். 

தூத்துக்குடி கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் சண்முகசாமி மகன் கோபால் (43), கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலைியல், இவர் நேற்று இரவு இவர் வைப்பாரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

குளத்தூர் சொசைட்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory