» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா

சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)



தூத்துக்குடியில் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியர் எழுத்தாளர் நெய்தல் யூ. அண்டோவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் யூ. அண்டோவுக்கு அவர் பணி செய்கிற புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. சவேரியானா இல்ல அதிபர் ஆரோக்கியசாமி, பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர், தலைமையாசிரியர் அமல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். 

ஆசிரியர் கவிஞர் காலின்ஸ் வாழ்த்துப்பா பாடினார். வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் தாளாளர் எ.பி.சி.வி. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், நெய்தல் அண்டோவின் மேடைப்பேச்சு, எழுத்து, சமூகப் பணி என்ற முப்பெரும் பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மண்ணின் வரலாற்றைத் துணிவுடன் பதிவு செய்யும் எழுத்துப் பணியைப் பாராட்டுவதாக தெரிவித்தார். 

விழாவில் உதவித் தலைமையாசிரியர்கள் வளன், ஜார்ஜ் பீட்டர் பாபு, ஞானசேகர், ஹம்பிரி மிராண்டா, ஆசிரியர் செயலர் பெனிட்டன், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்று ஆசிரியரைப் பாராட்டினர். முன்னதாக, ஆசிரியர் பிரான்சிஸ் ஹென்றி வரவேற்றார். நிறைவாக ஆங்கில வழிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் டைசன் நன்றியுரை கூறினார். நிகழ்வை ஆசிரியர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர் நெய்தல் யூ. அண்டோ ஏற்புரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory