» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!
சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)

மாமன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் ராம சீனிவாசனை சந்தித்து அனைத்து ஊர் பரத குல ஊர்கமிட்டியினர், தேர் மாறன் மீட்புக் குழு, முத்துக்குளித்துறை பரதநல தலைமை சங்கத்தினர், தமிழ்நாடு வணிகர் நல சங்கத்தினர், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றத்தினர், குரூஸ் பர்னாந்து மக்கள் பேரவை நிர்வாகிகள் மனு அளித்தனர.
அதில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும் 16ஆம் மாமன்னருமான தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரத வர்ம பாண்டியன் (என்ற) தேர்மாறன் வரைபட ஓவியத்தை தூத்துக்குடியில் புதிதாக புனரமைக்கப்படும் விமான நிலையத்தில் வைக்க கோரியும், அவரது உருவம் பதித்த தபால் தலை மத்திய அரசால் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)






SivaSriMar 22, 2025 - 11:39:04 AM | Posted IP 172.7*****