» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கனமழை: சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்!

சனி 22, மார்ச் 2025 8:17:25 AM (IST)



தூத்துக்குடியில் அதிகாலை 2 மணி முதல் கனமழை பெய்தால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக நல்ல வெயில் அடித்து வந்தது இதனால் பொதுமக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர்.  இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி முதல் தூத்துக்குடி இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் பிரைன் நகர்  முத்தம்மாள் காலனி, திரேஸ்புரம்,  புதுக்கோட்டை , முத்தையாபுரம், தாளமுத்து நகர்,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.  

இதன் காரணமாக சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது.  குறிப்பாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக வெப்பத்தால் அவதிப்பட்ட மக்கள் தற்போது மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலை காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory