» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2பேர் கைது

திங்கள் 17, மார்ச் 2025 8:58:26 AM (IST)

கோவில்பட்டியில் முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரம் 2- வது தெருவை சேர்ந்தவர் குருசாமி மகன் அய்யாதுரை (30). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், முகமது சாலியாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகாராஜாவுக்கும் இடையே கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலாயுதபுரம் சுடுகாடு அருகே உள்ள குளியலறை முன்பு அய்யாதுரை நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு நண்பர்கள் 5 பேருடன் வந்த மகாராஜா, திடீரென்று அய்யாதுரையை அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். அவருடன் வந்த 5 பேரும் அவரை கம்பால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயமடைந்த அய்யாதுரை யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடியுள்ளனர். இதைபார்த்த மகாராஜா உள்ளிட்ட 6பேரும், அய்யாத்துரைக்கு கொலை மிரட்டல் விடுத்தபடியே தப்பி ஓடி விட்டனர். 

இதில் காயமடைந்த அய்யாதுரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மகாராஜா (26), அவரது நண்பர் புது கிராமம் 3-வது தெருவை சேர்ந்த கஜேந்திர பூபதி மகன் காளிமுத்து (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education



New Shape Tailors



Thoothukudi Business Directory