» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது

சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

குமரி அருகே ஓடும் பஸ்சில் பணம் திருடிய தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். 

குமரி மாவட்டம் பாகோடு வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கீதாதேவி (50). இவர் வட்டவிளையில் இருந்து பொருட்கள் வாங்க மார்த்தாண்டம் பஸ்சில் சென்றபோது அவரது பர்சை அருகாமையில் நின்றிருந்த 2 பெண்கள் திருடி உள்ளனர். இதனை அருகே இருந்த பெண் பார்த்து கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து சக பயணிகள் பர்சை திருடிய 2 பெண்களை பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். 

அவர்கள் தூத்துகுடி அண்ணாநகர் ஓடை தெருவை சேர்ந்த அஞ்சலி (29), பவானி (27) என்பது தெரியவந்தது. மேலும் பர்சை திருடியதையும் ஒப்புகொண்டனர். அந்த பர்சில் ரூ.2 ஆயிரம் இருந்து உள்ளது. இதுபோன்று கூட்ட நெரிசல் மிக்க பஸ்சில் திருடுவது வேலையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்து போலீசார் தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors

CSC Computer Education






Thoothukudi Business Directory