» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)
குமரி அருகே ஓடும் பஸ்சில் பணம் திருடிய தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் பாகோடு வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கீதாதேவி (50). இவர் வட்டவிளையில் இருந்து பொருட்கள் வாங்க மார்த்தாண்டம் பஸ்சில் சென்றபோது அவரது பர்சை அருகாமையில் நின்றிருந்த 2 பெண்கள் திருடி உள்ளனர். இதனை அருகே இருந்த பெண் பார்த்து கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து சக பயணிகள் பர்சை திருடிய 2 பெண்களை பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்கள் தூத்துகுடி அண்ணாநகர் ஓடை தெருவை சேர்ந்த அஞ்சலி (29), பவானி (27) என்பது தெரியவந்தது. மேலும் பர்சை திருடியதையும் ஒப்புகொண்டனர். அந்த பர்சில் ரூ.2 ஆயிரம் இருந்து உள்ளது. இதுபோன்று கூட்ட நெரிசல் மிக்க பஸ்சில் திருடுவது வேலையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்து போலீசார் தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்
திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)

தூத்துக்குடி - திருச்சி புதிய விமான சேவை 30ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு
திங்கள் 17, மார்ச் 2025 9:30:03 PM (IST)

நண்பகலில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுப்படுத்த கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:08:17 PM (IST)

தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பரிதாப சாவு!
திங்கள் 17, மார்ச் 2025 8:02:02 PM (IST)

டாஸ்மாக் விவகாரம் : தூத்துக்குடியில் தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - 81 பேர் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 7:51:51 PM (IST)
