» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது

சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

சென்னை ஆதம்பாக்கத்தில் நகைக் கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டமிட்டதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை அதிபர் மகன் ஒருவரை கடத்தி கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் திட்டம் தீட்டி சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசாரும் உளவுப் பிரிவு போலீசாரும் அளித்த தகவலில் பெயரில் நேற்று இரவு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

இதன்படி மாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் முதலில் பிடிபட்டார். இவர் அளித்த தகவலின் பேரில் ஆதம்பாக்கம் பகுதியில் மேலும் 4 பேர் கண்காணித்து வருவது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆதம்பாக்கம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப் பட்டனர். அப்போது வேளச்சேரி விஜயநகர் பகுதியில் சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் தென் சென்னை கிளை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, பரங்கி மலை துணை கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் விரட்டி சென்று பிடித்தனர். அவர்களது பெயர் வினோத், பாலமுருகன் என்பது தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின் பெயரில் முருகன், சச்சின் ஆகிய இருவரும் பிடிபட்டனர். இவர்களும் ஆதம்பாக்கத்தில் வேறு ஒரு இடத்தில் வைத்து சிக்கினார்கள். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய போது போலீசில் சிக்கிக் கொண்டனர். நகைக் கடை அதிபர் மகனை கொலை செய்வதற்கு வேறு ஒருவரின் தூண்டுதலின் பேரில் இவர்கள் 5 பேரும் கூலிப் படையினராக செயல்பட்டு தூத்துக்குடியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தி ருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த 5 பேரின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றிய விசாரணை தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இதன் முடிவில் நகைக்கடை அதிபர் மகனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொடுத்த நபர் யார்? என்பது பற்றியும் தெரியவரும். அவரையும் கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory