» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து

சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)



சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையும், வானம் என்டர்டைன்மென்ட்டும் தூத்துக்குடியை சேர்ந்த இயக்குனர் அருந்ததி அரசு இணைந்து திருநங்கைகளின் வாழ்க்கை நகர்வைக் குறித்து எடுக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படமான "திரு" என்கிற குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்றதை தொடர்ந்து படக்குழுவினர் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

தூத்துக்குடி முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காவல்துறை அதிகாரியாகவே நடித்து சிறப்பித்திருந்தார். இந்த நிகழ்வில் இயக்குனர் அருந்ததி அரசு, இணை தயாரிப்பாளர்கள் ஜாகீர் ஹுசைன், மாரிமுத்து, நிர்வாக மேற்பார்வையாளர் மைக்கேல் ஜெரோம், படத்தில் நடித்த திருநங்கைகள் ஆர்த்தி, சிந்துஜா, ஜமுனா, கவிஞர் மாரிமுத்து, சக்திவேல், உதவி இயக்குனர்கள் திருஉதயகுமார், முத்துராம் சரண், ஸ்டில்ஸ் முனீஸ், காட்வின் ஆகியோர் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory