» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆபத்தான கம்பத்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

சனி 15, மார்ச் 2025 11:06:21 AM (IST)



சேர்வைக்காரன்மடம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சேர்வைக்காரன்மடம் தேரி மெயின் ரோட்டின் வழியாக புதுமனை செல்லும் வழியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையிலும் கீழே விழும் நிலையில்  ஆபத்தான  மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் கீழே உடைந்து 4 கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டு உள்ளது. 

இந்த பகுதியில் பல குடியிருப்பு வீடுகள் உள்ளது. மேலும் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் புதுமனை பகுதி செல்ல இந்த வழியை உபயோகித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஆபத்தாக கீழே விழும் நிலையில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ள மேற்கண்ட மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை வைத்துள்ளார்.


மக்கள் கருத்து

அதுக்குMar 15, 2025 - 11:38:16 AM | Posted IP 162.1*****

மின்வாரிய ஊழியர்களுக்கு அறிவு இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory